இடுகைகள்

மே 21, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடவுளுக்கு போடப்படும் பூணூலுக்கும் சாதிக்கும் சம்மந்தமில்லை

படம்
பூணூலுக்கும் சாதிக்கும் சம்மந்தமில்லை இங்கு சில விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன் பூணூல் பிராமணர்களின் அடையாளம் என்பது மிகவும் தவ்றான கணிப்புஅது எந்த ஒரு சடங்கை யார் செய்தாலும் அணிவிக்கப்பட்டுள்ளது வட இந்தியாவில் பிராமணர் அல்லாதவரும் பூணூல் போடுவர் தமிழகத்தில் நாட்டுக்கோட்டை செட்டியாரும் பூணூல் போடுவர் ஆச்சாரி எனப்படும் நகை செய்பவரும் பூணூல் போடுவர் குஜராத்தில் ஏறக்குறைய எல்லோருமே பூணூல் போடுகிறார்கள் வேத முறை படி நீங்கள் திருமணம் செய்தால் உங்களுக்கும் பூணூல் அணிவிக்கப்பட்டுதான் திருமணம் நடத்த படும் பூனூல் என்பது ஒரு சாதியின் அடையாளமாக முன்பு இருக்கவில்லை, அது சடங்கு செய்யும்போது அணிவிக்கும் ஒன்றாக இருந்தது, பிராமணர்கள் எப்போதும் சடங்கு செய்வதையே தொழிலாக கொண்டிருந்ததால் எப்போதும் பூணூல் அணிந்தனர் உண்மைதான்.. அது அவ்வாறு திரிந்துவிட்டது... ஆனால் நான் இங்கு சொல்ல வந்தது என்னவென்றால் கடவுள்களுக்கு பூணூல் இருப்பதினால் அவர்கள் பிராமணர்கள் என்ற அர்த்தம் கிடையாது என்பதுதான் உதாரணமாக இராமருக்கும் பூணூல் இருக்கும், ஆனால் அவர் அந்த அவதாரத்தில் ஷத்ரியர், பிராமணர் அல்ல என்பது கதையிலேயே கூறப்பட்...

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

படம்
கோயிலுக்குச் செல்கிறபோது இறைவனின் அருளை வேண்டுகிறோம். அங்குள்ள சிற்பங்களின் அழகில் மயங்குகிறோம். ஆனால் ஆலய அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் இருப்பதை எல்லோரும் அறிவதில்லை. கடவுளை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் கூட மனிதனைப் போலவே அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். . 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே' என்பது திருமூலர் அருட்பாடல். அவர் உடலே கோயில் என்றார். உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது என்பதை 'க்ஷத்திரம் சரீரப் பிரஸ்தாரம்' என்கிறது ஆகமச் சொற்றொடர். உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகாமண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு. கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்து உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. தூல சரீரம், ச...