கடவுளுக்கு போடப்படும் பூணூலுக்கும் சாதிக்கும் சம்மந்தமில்லை
பூணூலுக்கும் சாதிக்கும் சம்மந்தமில்லை இங்கு சில விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன் பூணூல் பிராமணர்களின் அடையாளம் என்பது மிகவும் தவ்றான கணிப்புஅது எந்த ஒரு சடங்கை யார் செய்தாலும் அணிவிக்கப்பட்டுள்ளது வட இந்தியாவில் பிராமணர் அல்லாதவரும் பூணூல் போடுவர் தமிழகத்தில் நாட்டுக்கோட்டை செட்டியாரும் பூணூல் போடுவர் ஆச்சாரி எனப்படும் நகை செய்பவரும் பூணூல் போடுவர் குஜராத்தில் ஏறக்குறைய எல்லோருமே பூணூல் போடுகிறார்கள் வேத முறை படி நீங்கள் திருமணம் செய்தால் உங்களுக்கும் பூணூல் அணிவிக்கப்பட்டுதான் திருமணம் நடத்த படும் பூனூல் என்பது ஒரு சாதியின் அடையாளமாக முன்பு இருக்கவில்லை, அது சடங்கு செய்யும்போது அணிவிக்கும் ஒன்றாக இருந்தது, பிராமணர்கள் எப்போதும் சடங்கு செய்வதையே தொழிலாக கொண்டிருந்ததால் எப்போதும் பூணூல் அணிந்தனர் உண்மைதான்.. அது அவ்வாறு திரிந்துவிட்டது... ஆனால் நான் இங்கு சொல்ல வந்தது என்னவென்றால் கடவுள்களுக்கு பூணூல் இருப்பதினால் அவர்கள் பிராமணர்கள் என்ற அர்த்தம் கிடையாது என்பதுதான் உதாரணமாக இராமருக்கும் பூணூல் இருக்கும், ஆனால் அவர் அந்த அவதாரத்தில் ஷத்ரியர், பிராமணர் அல்ல என்பது கதையிலேயே கூறப்பட்...