இடுகைகள்

மார்ச் 2, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மறைந்த  முன்னோர்களுக்கு  வருஷ திதி, (திவசம்) தர்ப்பணம்

படம்
  திதி கடைப்பிடிப்பது என்றால் என்ன? முன்னோர்களை, தகப்பனார்/தாயார் இறந்த திதியை வியாஜமாகக்கொண்டு நன்றியுடன் நினைவுகூறல். அதன் பொருட்டு படையல் போடபடும் பின்னர் குடும்பத்தினர் விருந்துபசாரத்தில் கலந்து கொள்வர்.  ஏன் கடைப்பிடிக்கிறார்கள்? காரணம், நன்றியுணர்ச்சியை மனத்தே இருக்கச்செய்து நம்மைப் பண்படுத்தவே. இறந்தவருடைய வருடாந்திர திதி ஒரு குறிப்பிட்ட நாளில்/திதியில் கொடுக்க முடியாத போது என்ன செய்வது? ஏன் கொடுக்க முடியாது மணமிருந்தால் மார்க்கம் உண்டு. அதேநாளில் தான் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத் தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. அகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும். உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டி நாள்தான். அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை எ...