இடுகைகள்

ஜனவரி 9, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நவராத்திரி பூஜை சரஸ்வதி பூஜை விஜயதசமி

படம்
நவராத்திரி பூஜை /சரஸ்வதி பூஜை / விஜயதசமி  (கொலு அமைக்கும் முறை, புராண விளக்கங்கள், ஒவ்வொரு நாளிலும் செய்ய வேண்டிய பிரஸாதங்கள் & வரைய வேண்டிய கோலங்கள்) சாக்த வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் பண்டிகைகளில் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை முதல் நவமி வரை மாலை வேளைகளில் அம்பிகையின் பல ரூபங்களை வழிபடுவது நவராத்திரி பூஜையாகும். நவமி அன்று சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படும். நாம் செய்யும் செயல்கள், வித்தைகள் அனைத்திற்கும் அதிபதி சரஸ்வதி. ஆகவே அன்று வீட்டிலுள்ள கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தையும் அழகுற அமைத்து, சரஸ்வதி தேவியின் அருளைப் பெற வேண்டும் நிகழ்ச்சியாக நடைபெறும். அன்று அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களை அன்றே உபயோகிக்காமல் மறுநாள் விஜயதசமி அன்று எடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும். விஜய தசமி - வெற்றியைத் தரும் பத்தாம் நாள். பூஜிக்கப்பட்ட கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தும் எடுத்...

வைகுண்ட ஏகாதசி

படம்
வைகுண்ட ஏகாதசிவிரத முறை மற்றும் எப்படி விரதத்தை நிறைவு செய்வது? வைகுண்ட ஏகாதசி திருநாளில் பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வெளியே வரும் காட்சியைப் பக்தர்கள் கண் குளிர கண்டு தரிப்பது வழக்கம். வைகுண்ட ஏகாதசி நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும். துவாதசி அன்று எப்படி விரதத்தை முடிக்க வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம் வைகுண்ட ஏகாதசி திருநாளில் பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வெளியே வரும் காட்சியைப் பக்தர்கள் கண் குளிர கண்டு தரிப்பது வழக்கம். வைகுண்ட ஏகாதசி என்பது ஒருநாள் தான் அதன் முன் வரும் பகல் பத்து, பின் வரும் இரா பத்து மிக விஷேசமானது. திருமங்கை ஆழ்வார் பெற்ற வரத்தின் படி, நாலாயிரம் திவ்யபிரபந்தத்தில் இருக்கும் பெரியாழ்வார் அருளிச்செய்திருக்கும் ஆயிரம் பாசுரங்கள் அமுதம் போன்றவை. இவற்றை நீங்கள் கேட்டு அருள வேண்டும் என வரம் கேட்டார். சரி என ஒப்புக்கொண்டு வரம் கொடுத்த பெருமாள், தினமும் 100 பாடல்கள் வீதம் பத்து நாட்கள் 1000 பாசுரங்களைக் கேட்பதாக அருளினார் அதற்கு இராபத்து என பெயர் வைத்தார். அதன் பின்னர் உன் மீது பாடப்பட்ட நாலாயிரம் திவ்யபிரபந்தங்களையும் கேட்டு அருள வேண்டும் என கேட்க, சரி சொல்ல இத...