வைகுண்ட ஏகாதசி


வைகுண்ட ஏகாதசிவிரத முறை மற்றும் எப்படி விரதத்தை நிறைவு செய்வது?


வைகுண்ட ஏகாதசி திருநாளில் பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வெளியே வரும் காட்சியைப் பக்தர்கள் கண் குளிர கண்டு தரிப்பது வழக்கம். வைகுண்ட ஏகாதசி நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும். துவாதசி அன்று எப்படி விரதத்தை முடிக்க வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்

வைகுண்ட ஏகாதசி திருநாளில் பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வெளியே வரும் காட்சியைப் பக்தர்கள் கண் குளிர கண்டு தரிப்பது வழக்கம்.

வைகுண்ட ஏகாதசி என்பது ஒருநாள் தான் அதன் முன் வரும் பகல் பத்து, பின் வரும் இரா பத்து மிக விஷேசமானது. திருமங்கை ஆழ்வார் பெற்ற வரத்தின் படி, நாலாயிரம் திவ்யபிரபந்தத்தில் இருக்கும் பெரியாழ்வார் அருளிச்செய்திருக்கும் ஆயிரம் பாசுரங்கள் அமுதம் போன்றவை. இவற்றை நீங்கள் கேட்டு அருள வேண்டும் என வரம் கேட்டார்.

சரி என ஒப்புக்கொண்டு வரம் கொடுத்த பெருமாள், தினமும் 100 பாடல்கள் வீதம் பத்து நாட்கள் 1000 பாசுரங்களைக் கேட்பதாக அருளினார் அதற்கு இராபத்து என பெயர் வைத்தார். அதன் பின்னர் உன் மீது பாடப்பட்ட நாலாயிரம் திவ்யபிரபந்தங்களையும் கேட்டு அருள வேண்டும் என கேட்க, சரி சொல்ல இதை எப்படி கேட்க என நினைத்த பெருமாள் வைகுண்ட ஏகாதசிக்கு முன் பத்து நாட்கள் பகல் பத்து என பத்து நாட்களில் நம்மாழ்வாரின் பாசுரங்களை தவிர உள்ள பாசுரங்களை கேட்டு அருள்வதாக கூறினார்.

அப்படி ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களை கேட்ட பெருமாள் வைகுண்ட வாசல் வழியாக வெளியே வரும் போது அவரை தரிசிக்க பக்தர்கள் விரதம் இருந்து வணங்குவது வழக்கம்.


வைகுண்ட ஏகாதசி விரதம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளை தரிசிக்க பக்தர்கள் தசமி அன்றும், ஏகாதசி முழுவதும் விரதம் இருப்பதோடு, ஏகாதசி பகல், இரவில் தூங்காமல் கண் விழித்து பெருமாளின் பாசுரங்களை கேட்டு, பெருமாளை சேவித்து அவனின் அருளைப் பெற பகதர்கள், வைகுண்ட வாசல் வழியாக வரும் பெருமாளை தரிசித்து, சொர்க்க வாசல் வழியாக நுழைந்து தரிசிக்க மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


எப்படி விரதத்தை முடிப்பது?

இப்படி இரண்டு நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள், துவாதசி தினத்தன்று பாரணை செய்ய வேண்டும். பாரணை என்பது 21 காய்கறிகளை வைத்து சமைத்து சாப்பிட வேண்டும் என்பார்கள்.

ஏனென்றால் கிட்டத்தட்ட தசமி தினமன்று உணவு எடுத்துக் கொள்ளவில்லை, ஏகாதசியிலும் உணவு உண்ணாமல், இரவு முழுவதும் விழித்திருக்கிறோம். அதனால் குடலில் சுரக்கக் கூடிய அமிலத்தால், வயிறுக்கு அல்சர் போன்ற பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக, அடுத்த நாள் சாப்பிடும் போது, குடலில் புண்கள் வந்திருந்தால் அதை ஆற்றக் கூடிய வகையிலான உணவுகளை சாப்பிட வேண்டும் என முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.

எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய உணவு:

குறிப்பாக அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டக்காய். அகத்திக் கீரை பொரியலாகவும், நெல்லிக்காய் துவையலாகவும், சுண்டக்காய் வறுவலாக சாப்பிட வேண்டும்.

இப்படி எல்லாம் சாப்பிட முடியாது என நினைப்பவர்கள், கீரையை மட்டும் பொரியல் செய்து பின்னர், மற்ற காய்கறிகளை போட்டு சாம்பார் வைத்து சாப்பிடவும். வடை, பாயசம் செய்ய முடிந்தால் செய்யலாம்.

அலுவலகத்திற்கு செல்வோர், குறைந்த பட்சம் கீரை, காய்கறி சாம்பாராவது செய்வது நல்லது.

இந்த அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டக்காய் குடலில் உள்ள புண்களை ஆற்றக் கூடியது. அதனால் தான் அகத்தில் உள்ள தீயை போக்கக் கூடியது என்பதால் அக+தீ+கீரை என முன்னோர்கள் பெயர் வைத்தனர்.

ஏகாதசி விரதத்தின் பலன்:

ஏகாதசி விரதம் இருப்பதோடு, துவாதசி அன்று உங்களால் முடிந்த அளவு சிலருக்கு வயிறார சாப்பாடு போடுவது நல்லது. இப்படி செய்வதால் இந்த விரதம் முழுமை அடைகிறது.அதனால் இருவருக்காவது உணவு வாங்கி கொடுத்து பசி ஆற்றுங்கள்.

துவாதசி அன்றும் பகலில் தூங்காமல், மாலை விளக்கேற்றி துளசியால் பெருமாளை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அன்று இரவு தூங்கலாம். இது தான் நாம் முறையாக இருக்கக் கூடிய ஏகாதசி விரதம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

​ஆடி அமாவாசை விரதம் / சித்ரா பௌர்ணமி விரதம் ::

வீட்டில் இறந்தவர்களின் படங்களை எப்படி வைத்து வழிபட வேண்டும்?

பித்ரு தோஷம்