இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

​ஆடி அமாவாசை விரதம் / சித்ரா பௌர்ணமி விரதம் ::

படம்
​ ஆடி அமாவாசை /சித்ரா பௌர்ணமியில் முன்னோர்களை நினைத்து வழிபட்டால் பாவங்கள், துன்பங்கள் தீரும். தடைகள் விலகி, நன்மைகள் நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சித்ரா பௌர்ணமி, ஆடி அமாவாசை விரதம் எப்படி இருக்க வேண்டும், எந்த மாதிரியான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். எந்த மாதிரியான விஷயங்களை கண்டிப்பாக செய்யக் கூடாது என பலருக்கும் தெரியாது. இவற்றை முறையாக தெரிந்து கொண்டு செய்வதால் அமாவாசை பௌர்ணமி விரதம் இருக்கும் பலன்களை நம்மால் முழுமையாக பெற முடியும். ஆடி அமாவாசை விரதம் :  அப்பா இழந்த ஆண்கள்,  கணவனை இழந்த மனைவிகள்  இருக்கும் விரதம் ஒரு வருடத்தில் நாம் எத்தனையோ விரதங்களை கடைபிடித்தாலும், அமாவாசை விரதம் என்பது மிகவும் புண்ணியங்களை தரக் கூடிய சிறப்பான விரதம் ஆகும். மற்ற அமாவாசைகளில் விரதம் இருப்பதை விட ஆடி அமாவாசை விரதம், தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும். ஆனால் இந்த ஆடி அமாவாசை விரதத்தை யாரெல்லாம் இருக்கலாம், யாரொல்லாம் இருக்கக் கூடாது, அன்று என்ன செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் செய்யக் கூடாது என்ற வரை முறை உள்ளது. இது பலருக்கும...

மறைந்த  முன்னோர்களுக்கு  வருஷ திதி, (திவசம்) தர்ப்பணம்

படம்
  திதி கடைப்பிடிப்பது என்றால் என்ன? முன்னோர்களை, தகப்பனார்/தாயார் இறந்த திதியை வியாஜமாகக்கொண்டு நன்றியுடன் நினைவுகூறல். அதன் பொருட்டு படையல் போடபடும் பின்னர் குடும்பத்தினர் விருந்துபசாரத்தில் கலந்து கொள்வர்.  ஏன் கடைப்பிடிக்கிறார்கள்? காரணம், நன்றியுணர்ச்சியை மனத்தே இருக்கச்செய்து நம்மைப் பண்படுத்தவே. இறந்தவருடைய வருடாந்திர திதி ஒரு குறிப்பிட்ட நாளில்/திதியில் கொடுக்க முடியாத போது என்ன செய்வது? ஏன் கொடுக்க முடியாது மணமிருந்தால் மார்க்கம் உண்டு. அதேநாளில் தான் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத் தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. அகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும். உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டி நாள்தான். அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை எ...