​ஆடி அமாவாசை விரதம் / சித்ரா பௌர்ணமி விரதம் ::



ஆடி அமாவாசை /சித்ரா பௌர்ணமியில் முன்னோர்களை நினைத்து வழிபட்டால் பாவங்கள், துன்பங்கள் தீரும். தடைகள் விலகி, நன்மைகள் நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சித்ரா பௌர்ணமி, ஆடி அமாவாசை விரதம் எப்படி இருக்க வேண்டும், எந்த மாதிரியான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். எந்த மாதிரியான விஷயங்களை கண்டிப்பாக செய்யக் கூடாது என பலருக்கும் தெரியாது. இவற்றை முறையாக தெரிந்து கொண்டு செய்வதால் அமாவாசை பௌர்ணமி விரதம் இருக்கும் பலன்களை நம்மால் முழுமையாக பெற முடியும்.

ஆடி அமாவாசை விரதம் :

 அப்பா இழந்த ஆண்கள்,  கணவனை இழந்த மனைவிகள்  இருக்கும் விரதம்

ஒரு வருடத்தில் நாம் எத்தனையோ விரதங்களை கடைபிடித்தாலும், அமாவாசை விரதம் என்பது மிகவும் புண்ணியங்களை தரக் கூடிய சிறப்பான விரதம் ஆகும். மற்ற அமாவாசைகளில் விரதம் இருப்பதை விட ஆடி அமாவாசை விரதம், தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும். ஆனால் இந்த ஆடி அமாவாசை விரதத்தை யாரெல்லாம் இருக்கலாம், யாரொல்லாம் இருக்கக் கூடாது, அன்று என்ன செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் செய்யக் கூடாது என்ற வரை முறை உள்ளது. இது பலருக்கும் தெரிவது கிடையாது.


அமாவாசை போன்ற முக்கிய விரத நாட்களில் தெரியாமல் நாம் செய்யும் சில தவறுகள் முன்னோர்களின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கி விடும். 

இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இதனால் ஆடி அமாவாசை விரதத்தை யாரெல்லாம் இருக்க வேண்டும், 

அன்று ஆண்கள் என்ன செய்ய வேண்டும், பெண்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்ளாலாம்.

ஆடி அமாவாசை விரதம் : ஆண்கள் - பெண்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்


அமாவாசை அன்று செய்ய வேண்டியவை :

இறந்தவர்களுக்கு பிடித்த சைவ உணவுகளை சமைத்து படையல் இட்டு, பிறகு தான் நாம் உணவு சாப்பிட வேண்டும். முதலில் முன்னோர்களுக்கு படையிட்டு, பிறகு காகத்திற்கு சாதம் வைத்து விட்டு,


 யாராவது இரண்டு பேருக்காவது அன்னதானம் வழங்கி விட்டு தான் அமாவாசை விரதம் இருப்பவர்கள் உணவு சாப்பிட வேண்டும்.

 அமாவாசை விரதத்திற்கு சமைக்கும் போது கண்டிப்பாக பூசணிக்காய், மரவள்ளி, அகத்திக்கீரை அல்லது முளைக் கீரை,  வாழைக்காய் , பாகற்காய் உணவில் சேர்க்க வேண்டும்

காத்தோட்டிக்காய் ஆடி அமாவாசை விரதத்தில் பெரும்பாலும் பொரித்து உணவில் சேர்ப்பர். அதற்கு சாப்பிடும் போது அதன் #கச்சல் தன்மையால் #அப்பா_என்ன_கச்சல் என்று அப்பாவை நினைப்பதாக ஒரு ஐதீகம் உண்டு.


ஆடி அமாவாசை விரதம் யாரெல்லாம் இருக்கலாம் ?

அப்பா இழந்த ஆண்கள். கணவனை இழந்த பெண்கள். அம்மா உயிருடன் இருந்து அப்பா மட்டும் இல்லை என்றாலும் அப்போதும் அவருடைய மகன் விரதம்  இருக்கவேண்டும், வருஷ திதி கொடுக்க முடியாதபோது அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய 5 விஷயங்கள் :

ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய 5 விஷயங்கள் :

1. அப்பா இல்லாத ஆண்கள் அமாவாசை விரதம் இருக்க வேண்டும்.

2. ஆடி அமாவாசை அன்று உபவாசமாக இருக்க வேண்டும்.

3. வருஷ திதி கொடுக்க முடியாதபோது, கண்டிப்பாக எள்ளும், தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும்.

4. அமாவாசை தினத்தில் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

5. இல்லாதவர்களுக்கு உணவு தானம் செய்ய வேண்டும் அல்லது பசுவிற்கு அகத்திக்கீரை தானம் கொடுக்க வேண்டும்.


பெண்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் :


பெண்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் :

1. கணவனை இழந்த பெண்கள் மட்டுமே தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

2. சுமங்கலி பெண்கள் அமாவாசை தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.

3. அமாவாசை அன்று சுமங்கலிப் பெண்கள் உபவாசமாக இருக்கக் கூடாது.விரதம் இருக்கக் வேண்டும்.



4. கணவர், அவரின் பெற்றோருக்காக அமாவாசை விரதம் இருந்தால் மனைவி சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் விரதத்திற்கு சமைக்கக் வேண்டும் . (மனைவி பதிவிரதை விரதம் இருக்க வேண்டும்)


5. பெண்கள் அமாவாசை அன்று இரவு உணவின்போது கண்டிப்பாக ஒரு கைப்பிடி அளவாவது அன்னம் சாப்பிட வேண்டும்.


பெண்கள் செய்யக் கூடாதவைகள் :

சுமங்கலி பெண்கள் அமாவாசை விரதம் இருந்து, தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. கணவர், அவரின் பெற்றோருக்காக அமாவாசை விரதம் இருந்தால் மனைவி சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் விரதத்திற்கு சமைக்கக் வேண்டும்( (மனைவி பதிவிரதை விரதம் இருக்க வேண்டும்). கணவர் உயிருடன் இருக்கும் போது இறந்த தனது தந்தைக்காக அந்த பெண் விரதம் இருக்கக் கூடாது. அவருடைய உடன் பிறந்த சகோதரர்கள் தான் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஒருவேளை சகோதரர்கள் யாரும் கிடையாது. அப்பாவிற்கு பெண் குழந்தை மட்டும் தான் என்றால், அன்றைய தினம் கோவிலுக்கு சென்று, தந்தையை நினைத்து பிரார்த்தனை செய்து, நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடலாம். அங்கு யாராவது ஒருவருக்கு உணவு வாங்கிக் கொடுக்கலாம். வீட்டிற்கு வந்து அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து யாரையாவது இரண்டு பேரை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போடலாம்.


சித்ரா பௌர்ணமி விரதம் :

​ஆடி அமாவாசை விரதம்  போல் சித்ரா பௌர்ணமி விரதம் 

அம்மா இழந்த ஆண்கள்,  மனைவி இழந்த ஆண்கள் இருக்கும் விரதம்

 

அம்மா இழந்த ஆண்கள். மனைவி இழந்த கணவன் அப்பா உயிருடன் இருந்து அம்மா மட்டும் இல்லை என்றாலும் அப்போதும் அவருடைய மகன் விரதம்  இருக்கவேண்டும், வருஷ திதி கொடுக்க முடியாதபோது பௌர்ணமி அன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வீட்டில் இறந்தவர்களின் படங்களை எப்படி வைத்து வழிபட வேண்டும்?

பித்ரு தோஷம்