ஆடி அமாவாசை /சித்ரா பௌர்ணமியில் முன்னோர்களை நினைத்து வழிபட்டால் பாவங்கள், துன்பங்கள் தீரும். தடைகள் விலகி, நன்மைகள் நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சித்ரா பௌர்ணமி, ஆடி அமாவாசை விரதம் எப்படி இருக்க வேண்டும், எந்த மாதிரியான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். எந்த மாதிரியான விஷயங்களை கண்டிப்பாக செய்யக் கூடாது என பலருக்கும் தெரியாது. இவற்றை முறையாக தெரிந்து கொண்டு செய்வதால் அமாவாசை பௌர்ணமி விரதம் இருக்கும் பலன்களை நம்மால் முழுமையாக பெற முடியும். ஆடி அமாவாசை விரதம் : அப்பா இழந்த ஆண்கள், கணவனை இழந்த மனைவிகள் இருக்கும் விரதம் ஒரு வருடத்தில் நாம் எத்தனையோ விரதங்களை கடைபிடித்தாலும், அமாவாசை விரதம் என்பது மிகவும் புண்ணியங்களை தரக் கூடிய சிறப்பான விரதம் ஆகும். மற்ற அமாவாசைகளில் விரதம் இருப்பதை விட ஆடி அமாவாசை விரதம், தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும். ஆனால் இந்த ஆடி அமாவாசை விரதத்தை யாரெல்லாம் இருக்கலாம், யாரொல்லாம் இருக்கக் கூடாது, அன்று என்ன செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் செய்யக் கூடாது என்ற வரை முறை உள்ளது. இது பலருக்கும...
கருத்துகள்