மகப்பேறு அடைந்துள்ள தாய்மாருக்கான உணவுகள்


மகப்பேறு அடைந்துள்ள தாய்மாருக்கான உணவுகள்


கொடுக்கும் உணவு கொடுக்கும் படிமுறையும் காலமும்


* 1st day (பிரசவித்த தினம்)

கோப்பி, ஹொர்லிக்ஸ் போன்ற திரவ உணவுகள் , பிஸ்கட் , bread, oats with milk 

*2nd & 3rd day (2ம், 3ம், நாள் )

Double polish சிவப்புப் பச்சை அரிசிச் சோறு (தவிடு நீக்கிய சிவப்புப் பச்சை அரிசியில் தயாரிக்கப்பட வேண்டும்.) தனி பத்தியக்கறி (மதிய உணவாக)

இடியப்பம், தனி பத்தியக்கறி (இரவு உணவு)

தனிபத்தியக்கறி

தேவையான பொருட்கள்:-

நற்சீரகம் -1 ½ மேசைக் கரண்டி

மஞ்சள் - சிறிய துண்டு

இஞ்சி - சிறிய துண்டு

வேர்க்கொம்பு - சிறிய துண்டு

மிளகு - 6

வெள்ளைப்பூடு - 6 பல்லு

உப்பு - அளவாக

நீர் - 2 தம்ளர்

செய்முறை :-

• சீரகம், மஞ்சள், இஞ்சி, வேர்க்கொம்பு, மிளகு, இவற்றை நன்கு பசுந்தாக அரைத்து இரண்டு பல்லு வெள்ளைப் பூண்டையும் சேர்த்து அரைத்துத் திரணையாக்கவும்

• அரைத்த கூட்டை நீரிலிட்டு உப்பும் சேர்த்துக் கரைத்து மிகுதி வெள்ளைப்பூட்டையும் சேர்த்துக் கொதிக்க வைத்து வற்றமுன் இறக்கிக் கொள்ளவும்.

* 4th day to 1 month (4ம் நாள் தொடக்கம் தொடர்ந்து 1 மாதம் வரை மதிய -இரவு உணவு )

கைக்குத்தரிசிச்சோறு, தனிபத்தியக்கறி,

கத்தரிக்காய்ப் பத்தியக்கறி,

பிஞ்சு முருங்கைக் காய் பத்தியக்கறி சீரக முட்டைப் பொரியல், காய்கறிவகை, பாற்கறி 

மீன்பத்தியக்கறி (7ம் நாட்களின் பின் சேர்த்துக்கொள்ளலாம்) 

* 5th day (5ம் நாட்களின் பின் காலை நேரம்)

முட்டைக் கோப்பி

*4th day ,5th day ,6th day 

3-ம் நாளின்பின் தொடர்ந்து 3 நாட்கள் காலை (காலை உணவு தவிர்த்தல்)

வேப்பிலைக்காம்பு காயம் பனங்கட்டியுடன் 

வேப்பிலைக் காயம்

தேவையான பொருட்கள்:-

நற்சீரகம் - 1 ½மேசைக்கரண்டி

மஞ்சள் - சிறிய துண்டு

மிளகு - 2

இஞ்சி - சிறிய துண்டு

வேப்பிலைக்காம்பு - 15

பனங்கட்டி - 1½ மேசைக்கரண்டி

தண்ணீர் - 1 ½ தம்ளர்

உப்பு - அளவாக

செய்முறை :-

• நற்சீரகம், மஞ்சள், மிளகு, இஞ்சி யாவற்றையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

• வேப்பமிலையை உருவியபின் காம்பை எடுத்து உரலில் இட்டுத் துவைத்துக் கொள்ளவும்.

• அத் துவையலுடன் சிறிதளவு நீர் சேர்த்து சுத்தமான வெள்ளைத் துணியிலிட்டுப் பிளிந்து ¼ தம்ளர் சாறு எடுத்துக் கொள்ளவும்.

• அரைத்த கூட்டைத் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

• அக்கரைசலுடன் வேப்பம் சாற்றைக் கலந்து சிறிதளவு உப்பும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

• காயம் கூழ்ப்பதமாக வரும்போது இறக்கி ஆறவிடவும்.

• நன்கு ஆறியபின் பனங்கட்டியுடன் பருகக் கொடுக்கவும்.

குறிப்பு

வயிற்று நோ, உடல் நோ, மலச்சிக்கலை அகற்றல், அழுக்குகளை வெளியேற்றல், மற்றும் புண் தொற்றுக்கள் ஏற்படாமை என்பனவற்றுக்கு இவ் வேப்பிலைக் காயம் மிகவும் பொருத்தமானது.

* 7th day 

7-ம் நாள் தொடக்கம் தொடர்ந்து 10 நாட்கள் காலை (காலை உணவு தவிர்த்தல்)

பச்சைச் சரக்கு 

தேவையான பொருட்கள் :-

நற்சீரகம் - 1½ மேசைக்கரண்டி

மஞ்சள் - சிறிய துண்டு

மிளகு - 2

இஞ்சி - சிறிய துண்டு

பனங்கட்டி - ½ மேசைக்கரண்டி

செய்முறை :-

• நற்சீரகம், மஞ்சள், மிளகு, இஞ்சி யாவற்றையும், அம்மியில் வைத்து நன்கு பசுந்தாக அரைத்துக் கொள்ளவும்.

• அரைத்து இறுக்கமான உருண்டையாக்கிக் கொள்ளவும்.

• அதனுடன் பனங்கட்டியையும் உதிர்த்துச் சேர்த்து விழுங்கக் கூடிய சிறு உருண்டைகளாக்கிக் கொடுக்கவும்.

குறிப்பு :-

முதல் மூன்று நாட்களின் பின் தொடர்ந்து பத்து நாட்களுக்குக் காலையில் கொடுக்கலாம். குழந்தையைப் பிரசுவித்த தாய்மாருக்கும் பொருத்தமானது

* 8th day

இடியப்பம் 8ம் நாளின் பின் இரவு உணவாக.

15th day 

ஊதுமாக்கூழ் 15ம் நாளின் பின் இடைஇடையே மாலை, இடைவேளை

* 20th day 

கோழிவிறாத்து (கோழி பத்தியக்கறி) 20ம் நாளின்பின் இடையிடையே கொடுக்கலாம்

*21th day

இதரைவாழைப்பழம், பப்பாசிப்பழம் 21ம் நாளின் பின் சாப்பிட்டபின் 

* 21day 

ஓட்டுமா / பொரி அரிசிமா 21ம் நாட்களின் பின் காலை - மாலை இடைவேளை

*31st 

எள்ளுப்பா 31ம் நாட்களின் பின் காலை – மாலை இடைவேளை


*1st day untill feeding 

குழந்தைக்கான பால் உற்பத்திக்கு 

காலை - மாலை இடைவேளை


Oats  with milk  

Mothers Horliks 

Nestam,  with milk 

Nestamalt, Protnex 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

​ஆடி அமாவாசை விரதம் / சித்ரா பௌர்ணமி விரதம் ::

வீட்டில் இறந்தவர்களின் படங்களை எப்படி வைத்து வழிபட வேண்டும்?

பித்ரு தோஷம்